Home Archive by category

ஜனாதிபதி இன்று பிரித்தானியாவுக்கு பயணம்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (17) பயணமாகிறார்.

இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்படும் ஜனாதிபதி, திங்கட்கிழமை (19) லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவுள்ளார்.

மறைந்த ராணியின் நினைவாக இலங்கையில் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை துக்க தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts