ஈழத்தின் முன்னணித் திறனாய்வாளர் கே. எஸ் சிவகுமாரன் காலமானார்
ஈழத்தின் முன்னணித் திறனாய்வாளர் கே. எஸ் சிவகுமாரன் காலமானார் .
அவருடைய மறைவு செய்தி ஈழத்து இலக்கிய உலகைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவந்த கே.எஸ். சிவகுமாரன், திறனாய்வு, பத்தியெழுத்து, ஆக்க இலக்கியம், பத்திரிகை ஆசிரியர், நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், ஆங்கில ஆசிரியர் எனப் பல்துறைகளில் இயங்கியவர்.