நினைவேந்த ஒருபோதும் அனுமதியோம்- சரத் வீரசேகர ஆவேசம்
பௌத்த-சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே குறித்த கருத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இலங்கை பௌத்த சிங்கள நாடு . இந்த நாட்டுக்குள்தான் வடக்கு, கிழக்கு மாகா ணங்கள் அமைந்துள்ளன . வடக்கு கிழக்கு வேறு நாடு அல்ல . அந்த மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவையும் அல்ல .
வடக்கு,கிழக்கில் புலிப் பயங்கரவாதி களைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது. தமிழ் மக்களும் , அவர்களின் பிரதிநிதி களும் நாட்டிலுள்ள சட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் . சட்டங்களை மீறினால் அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.