மகாராணிக்கு என்ன பிடிக்கும் மனம் திறக்கும் றொரன்டோ சமையற்கலை நிபுணர்
காலஞ்சென்ற பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு என்ன சாப்பிட பிடிக்கும் என்பது பற்றிய விபரங்களை றொரன்டோ சமையற்கலை நிபுணர் ஜோன் ஹிக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணி தங்கியிருந்த பக்கிங்ஹாம் மற்றும் பால்மொரால் மாளிகைகளில் ஹிக்கின்ஸ் சமையற்கலை நிபுணராக கடமையாற்றியுள்ளார்.
மகாராணியின் மரணம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1980ம் ஆண்டிலிருந்து பெல்மொரால் மற்றும் பக்கிங்ஹாம் மாளிகைகளில் இரண்டு ஆண்டுகள் சமையல் பணிகளில் ஹிக்கின்ஸ் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாத்து, மாங்காய் மற்றும் சொக்லேட் கேக் என்பனவற்றை அவர் விரும்பி உட்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.
தாம் பணியாற்றிய காலங்களில் சைக்கிளோட்டத்தில் ஆர்வம் காட்டியதாகவும் அது குறித்து அறிந்து கொண்ட மகாராணி தம்மிடம் சைக்கிளோட்டம் பற்றி பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
பணியாளர்கள் விடை பெற்றும் செல்லும் சந்தர்ப்பத்தில் மகாராணி அவர்களுடன் நடனமாடும் வழக்கத்தை கொண்டிருந்தார் எனவும் தாம் பிரியாவிடை பெற்ற போதும் தன்னுடன் மகாராணி நடனமாடினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச குடும்பத்தினரும் சாதாரணமானவர்களே என அவர் தெரிவித்துள்ளார்.