இலங்கை வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து
2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நேரத்தில் இந்த வெற்றி நாட்டுக்கு பலமாக அமையுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.