ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்த நடிகை கைது
சிங்கள நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த, இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னரும் பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.