Home Archive by category

இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் திரில் வெற்றி

துபாயில் இன்று நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியின் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில்  வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பாட்டம்  செய்த இந்திய அணியில் தலைவர்  ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ஓட்டம்  சேர்த்தார். அத்துடன், டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ஓட்டம் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார். மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுலும் 28 ஓட்டம்  விளாசினார்.

மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி 60 ஓட்டம் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ஓட்டம்  எடுத்து ஆட்டமிழந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டம்  குவித்தது. இதையடுத்து 182 ஓட்டம்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரிஸ்வான் 71 ஓட்டம்  குவித்தார். தலைவர்  பாபர் அசாம் 14 ஓட்டம்  சமான் 15 ஓட்டம் எடுத்தனர். முகமது நவாஸ் 42ஓட்டம் அடித்தார். ஷா 14 ஓட்டம் , ஆசிப் அலி 16 ஓட்டம் பெற்றார். பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டம்  எடுத்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Related Posts