போராட்டக்காரர்கள் பலர் இலங்கையிலிருந்து தப்பி ஓட்டம்! சர்வதேச பொலிஸாரின் உதவி கோரல்
போராட்டத்தின் போது பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட முன்னணி வர்த்தகர்கள் உட்பட சுமார் 80 பேர் பல்வேறு வழிகளில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் குறித்து பாதுகாப்பு படையினர் விசேட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை கைது செய்ய இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
சிலர் வெளிநாடுகளுக்கு சென்று, தமக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதாக தூதரகங்களில் பொய்யான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக அறியமுடிகின்றது.
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்ட கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலும் 200 பேர் வெளிநாடு செல்வதற்காக தூதரகங்களில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.