மொட்டு பிளவடைந்தது;டலஸ் தலைமையில் புதிய அணி உருவானது
பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாகி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்ட பேராசிரியர் G.L.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் இன்று புதிய அரசியல் இயக்கமொன்றை ஆரம்பித்தனர்.
‘சுதந்திர மக்கள் சபை’ என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
சுதந்திர மக்கள் சபையின் புதிய அலுவலகம் நாவல, கொஸ்வத்தை பிரதேத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.