Home Archive by category

அனைத்துக் கட்சி அரசாங்கமே சிறந்தது; nநாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ரணில் அறிவிப்பு

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கமே சிறந்தது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் தம்மை அர்ப்பணிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று இன்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டுள்ளார்.
 
தலதா மாளிகைக்குச் சென்ற அதிபரை கண்டி நகரபிதா கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட அதிபர் மகா சங்கத்தினரை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் இன்று மாலை கண்டி அதிபர் மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்,

“நாம் தற்போது ஒன்றிணைய வேண்டும். நீங்கள் அனைவரும் கடந்த மே 9 ஆம் திகதி முதல் எதிர்கொண்ட துன்பங்களை நான் அறிவேன். சிலருக்கு வீடு இல்லாமல் போனது. சிலருக்கு கிராமத்தில் இருந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. அச்சுறுத்தல் இருந்தது. அந்தக் காலம் தற்போது நிறைவடைந்துள்ளது.

நாம் ஒன்றிணைய முயற்சிப்போம். நாம் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைப்போம். அவ்வளவு தான் நான் கேட்கிறேன்.

இந்த இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற இரண்டு கட்சியினரும் உள்ளனர். இந்த அரங்கில் மீதமுள்ள பகுதியும் நிரம்பி இருப்பதை பார்க்க எனக்கு விரும்பம் உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களையும் அழைத்து வர முடியாதா? இதை நிரப்புவோம்.

இதை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டியதில்லை” என்றார்.

Related Posts