Home Archive by category

குமார வெல்கம மீது தாக்குதல்

மத்துகமை நகரில் முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமவை ஒருவர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகமை நகரில் மரக்கறி சந்தைக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து வெல்கம தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான வெல்கம சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஆண்டு போராட்டங்கள் நடைபெற்ற போது, குமார வெல்கம சிலரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts