'தமிழ் மக்களை அரசாங்கம் மாற்றுக்கோணத்தில் பார்க்கவில்லை'
தமிழ் மக்களை அரசாங்கம் மாற்றுக்கோணத்தில் பார்க்கவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றில் 22 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
நல்லிணக்க அலுவலகம் மற்றும் காணாமல் போனவர்களுக்கான நட்டஈடுகள் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படும்.
புலம்பெயர்ந்த தமிழர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். முன்னைய காலத்தில் அனைத்து தரப்பிலும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன.
அவை தொடர்பாக தொடர்ந்தும் பேசி, பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்லமுடியாது.
எனவே தற்போதே பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.