Home Archive by category

ஆசிய கிண்ண வலைபந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம்!

சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் தர்ஜினி சிவலிங்கம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

தற்போது அவுஸ்ரேலியாவில் வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் தர்ஜினி சிவலிங்கம் அங்கிருந்து நேரடியாக சிங்கப்பூர் சென்று இலங்கை குழாத்துடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஐந்து தடவைகள் சம்பியனான இலங்கை, கடைசியாக 2018 இல் வென்ற கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளும் என நம்பப்படுகிறது.

இலங்கை வலைபந்தாட்ட அணியின் தலைவியாக கயஞ்சலி அமரவன்ச நியமிக்கப்பட்டுள்ளதுடன் உதவித் தலைவியாக   துலங்கி வன்னித்திலக்க செயற்படவுள்ளார்.

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் செப்டெம்பர் 3ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

Related Posts