'சர்வதேச நெருக்கடிக்கு காரணம் இதுதான்'
இலங்கையில் தொடர்ச்சியாக அவசர கால சட்டமும்,பயங்கரவாத சட்டமும் நீடிக்கின்றமையே தற்போது இலங்கை சர்வதேச நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்,ஜனநாயக விரோத செயற்பாடுகள் மூலம் நாடு சர்வதேச நாடுகளிடம் கடன் வாங்குவதற்காக ஏங்கி நிற்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.