Home Archive by category

'வீதிக்கு இறங்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்'

ஜனநாயகவிரோத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் வீதிக்கு இறங்கும் நிலைமையை ஏற்படுத்தி விட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தை நேற்றைய தினம் சந்தித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஜனநாயகத்தின் பெயரால் ஊடகங்களையும் நீதித்துறையையும் விளையாட்டாகக் கருதுகின்றனர்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதித்துறையை கடுமையாக அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இவ்வாறு நீதித்துறை மற்றும் ஊடகங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts