நல்லூர் ஆலய இரதோற்சவம்!
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று காலை இடம்பெற்றது.
வசந்த மண்டபத்தில் விஷேட அபிஷேங்கள், ஆராதனைகள் இடம்பெற்று, பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை, சமேதராக தேரில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 02 ஆம் திகதி ஆரம்பமான மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையவிருக்கிறது.