இலங்கையில் 300 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இன்று முதல் இறக்குமதிக்கு தடை
இலங்கையில் இன்று (23) அமலுக்கு வரும் வகையில் சொக்கலேட், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.