Home Archive by category

கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டமை நியாயமற்றது

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அது வேறு விடயம். ஆனால் பாராளுமன்றத்திற்கு வருகைதரும் முன்னர், அவரை கைது செய்தமை நியாயமான செயல் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்,

மேலும் கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர்,

பாராளுமன்ற சிறப்புரிமைகள் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச இதுவிடயத்தில் தெளிவான ஆணையொன்றை வழங்கியுள்ளமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் ” என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ,

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை எடுத்த பின்னர், அவரை பாராளுமன்றம் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் , பாதுகாப்புத்துறையினரின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க விரும்பவில்லையென தெரிவித்தார்.

Related Posts