Home Archive by category

ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குகிறது சிங்கப்பூர்!

ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் இரத்து செய்து, நகர-மாநிலத்தில் ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குகிறது.

 

தேசிய தொலைக்காட்சியில் பிரதமர் லீ சியென் லூங் அறிவித்த இந்த முடிவு பல ஆண்டுகளாக கடுமையான விவாதத்திற்குப் பிறகு வந்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள எல்.ஜி.பி.டி. ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை ‘மனிதகுலத்திற்கான வெற்றி’ என்று பாராட்டியுள்ளனர்.

நகர-மாநிலம் அதன் பழமைவாத மதிப்புகளுக்கு பெயர் பெற்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வரும் மக்கள் காலனித்துவ கால 377ஏ சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தியா, தாய்வான் மற்றும் தாய்லாந்திற்குப் பிறகு, ஆசியாவிலேயே எல்ஜிபிடி உரிமைகளை அங்கிகரித்த நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது.

அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாடு 377ஏ – ஆண்களுக்கிடையிலான பாலுறவைத் தடைசெய்யும். ஆனால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் லீ சியென் லூங்,

“இதுதான் சரியான செயல், பெரும்பாலான சிங்கப்பூரர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகின்றேன். ஓரினச்சேர்க்கையாளர்கள் இப்போது சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். 377ஏ ஐ நீக்குவது நாட்டின் சட்டங்களை தற்போதைய சமூக விதிகளுக்கு ஏற்ப கொண்டு வரும்” என கூறினார்.

Related Posts