Home Archive by category

தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது; டலஸ் அணி அறிவிப்பு

நாட்டின் நலன் கருதி தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

டலஸ் ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று அநுராதபுரத்துக்கு பயணம் மேற்கொண்டனர்.

ருவன்வெலிசாய உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபட்டதுடன், மகாசங்கத்தினரையும் சந்தத்து ஆசிபெற்றனர்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் என்பது வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். அந்த ரஜரட்ட மண்ணில் இருந்து எமது செயற்பாடு ஆரம்பமாகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts