Home Archive by category

ஜெரோமின் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை

மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோவின் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பண மோசடியின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிவத்துரு ஹெல உறும்யவும் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவினால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கூட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சென்றுள்ள ஜெரம் பெர்னாண்டோ ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ள நிலையில், அவர் வந்தவுடன் சட்டத்தை அமுல்படுத்தி கைது செய்யுமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்து தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts