Home Archive by category

தனியார் வசம் செல்லும் மத்தள விமான நிலையம்

மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளும் விற்கப்படும் என்றும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
 
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

" மத்தள விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும். அத்துடன் நாட்டில் விமானப் போக்குவரத்து செயல்முறையை மறுசீரமைக்கும் போது அன்னியச் செலாவணியை ஈட்டும் வகையில் விமான நிலையம் மாற்றப்பட வேண்டும்.

அத்துடன் பராமரிப்பு தரத்தையும் மேம்படுத்த வேண்டும். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பாதுகாப்பு வலையமைப்பாக இரண்டாவது விமான நிலையமாக மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படும்" எனக் குறிப்பிட்டார்.

Related Posts