Home Archive by category

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 14 வது நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகிய நிலையி்ல் அதனை நினைவு கூரும் முகமாகவும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முகமாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த  முள்ளிவாய்க்கால்  கஞ்சி வழங்கும் நிகழ்வானது  நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று(11) காலை 11.00 மணியளவில் ஆரம்பமானது.

இதேவேளை எதிர்வரும் 18 ம் திகதி வரை  காலை 9.30 தொடக்கம் இரவு 8.00 மணி வரை தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts